பள்ளிக்கரணை பாவாணர் தமிழ்வழிப் பள்ளி இடிப்பு
காவல்துறை உதவியுடன் அட்டூழியம்
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த 1999ஆம் ஆண்டு 30 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பாவாணர் தமிழ்வழிப்பள்ளி, பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளையால் நடத்தபடுவதாகும். இப்பள்ளி தமிழ்வழிக் கல்விக் கழகத்துடனும், தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்புடனும் உறுப்பாண்மை பள்ளியாக இணைந்து செயல்பட்டு வருகிறது.
துளிர் நிலை (எல்.கே.ஜி) முதல் 5ஆம் வகுப்பு வரை நடைபெறும் இப்பள்ளியில் இப்போது மொத்தம் 144 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தாய்மொழிக் கல்வியை வயுறுத்தும் # வணிகமில்லா கல்வியை வயுறுத்தியும் இப்பள்ளியை நடத்தி வருகிறோம்.
பொதுமக்களிடம் பெறும் நன்கொடை, மாணவர்களிடம் பெறும் மிகக்குறைந்த கட்டணம் இவற்றை கொண்டுதான் பள்ளியை நடத்தி வருகிறோம்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்களே.
பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வுகள் மறக்கமுடியாத ஒன்று. பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களும் மேடைக்கூச்சம் இன்றி துணிவாக கலை நிகழ்வுகள் நடத்திக் காட்டுவது பள்ளியின் சிறப்பு.
கடந்த ஆறு ஆண்டுகளில் பள்ளி ஆண்டு விழாவிற்கு தென்மொழி ஆசிரியர் திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை தலைவர் திரு.சா.சந்திரேசன், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் வசந்த கந்தசாமி, ஞானபாரதி வலம்புரி ஜான், திரைப்பட நடிகர் சூர்யா, தமிழிசை பாணர் புஷ்பவனம் குப்புசாமி, திரைப்பட இயக்குநர் கெளதம், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆர்.டி.இராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் போருர் சண்முகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.கிறிஸ்துதாஸ் காந்தி, இராவணன் நிறுவனத் தலைவர் திரு.இரத்தினசாமி, திராவிடர் கழகத்தின் பேரா.இறையனார் ஆகிய பெருமக்கள் கலந்து கொண்டு பாராட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்க தமிழ்சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு பாடத்துணைக்கருவிகள் வழங்கி சிறப்பித்துள்ளனர். வானொ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
இந்த அளவுக்கு சிறப்பாக நடைபெற்ற பள்ளிதான் கடந்த 19#07#2005 அன்று மாலை காவல்துறை உதவியுடன் ரெளடிகளைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
வழக்கு மன்ற ஆணைக்கு எதிராக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் வீரமணி
பள்ளி இடிக்கப்பட்ட அன்று பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்தார். பள்ளியின் ஏற்பிசைவு (அங்கீகாரம்) குறித்து விசாரணை செய்தார். பள்ளியின் சார்பில் 11#02#2004 அன்று ஏற்பிசைவுக்காக அனுப்பப்பட்ட விண்ணப்பத்தைக் காட்டினோம். ஓர் ஆண்டுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இராமசாமி என்பவர் மூலம் அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வந்துள்ளதாகக் கூறினார். இடம் தொடர்பாக இராமசாமிக்கும் பள்ளியின் அறக்கட்டளைக்கும் நடக்கும் வழக்கு பற்றி விளக்கினோம். அதற்குள் இராமசாமி ஐந்து பேருடன் அங்கு வந்தார். கல்வி அலுவலர் பள்ளி வளாகத்திற்கு வெளியே சென்று அவர்களுடம் பேசினார். இராமசாமி கல்வி அலுவலரை மிரட்டியதுபோலத் தெரிந்தது. அவர்களிடம் பேசிவிட்டு பள்ளிக்குள் வந்து பார்வையாளர் பதிவேட்டில் கருத்துக்களை எழுதினார். விரைந்து ஏற்பிசைவுக்கான கருத்துருக்களை நிறைவு செய்யச் சொல் எழுதிவிட்டு பள்ளி இடம் தொடர்பான செய்தியில் நான் தலையிடமுடியாது ஏற்பிசைவு குறித்து மட்டும்தான் என்னால் தலையிட முடியும் என்று இராமசாமியிடம் சொல்விட்டு சென்று விட்டார். கல்வி அலுவலர் சென்றபிறகு அங்கிருந்து இராமசாமியும் அவரது ஆட்களும் சென்றுவிட்டனர்.
அதன்பிறகு மாலை 4 மணிக்கு பள்ளிவிட்டபிறகு பள்ளிக்கரணை தலைமைக்காவலர் (ஜ.எஸ்) இராஜ்குமார் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் பள்ளியின் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை குறித்து விசாரித்துவிட்டு சென்றார். பார்வையாளர் பதிவேட்டில் அவரும் தான் வந்து சென்றதைப் பதிவு செய்து இருக்கிறார். அவர் வந்து சென்ற கால் மணி நேரத்தில் சரியாக 4.15 மணிக்கு பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணி, 25 காவலர்கள், இராமசாமி, இரங்கநாதன், உமாபதி, சுமார் 50 ரெளடிகள் பொக்லைன் (ஜே.சி.பி) எந்திரத்துடன் வந்தனர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், ஒரு சில மாணவர்களும் மட்டும் இருந்தனர். என்ன, ஏது என்று தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் கேட்டபோது அவர்களை அடித்து வெளியே துரத்திவிட்ட காவல்துறையினரும் ரெளடிகளும் மளமளவென பள்ளியில் இருந்த மேசை, நாற்காகள், பதிவேடுகள், புத்தகங்கள், சீருடைகள், சான்றிதழ்கள், தொலைபேசி, பள்ளி செலவுக்காக அடகு வைக்க வைத்திருந்த 10 பவுன் நகை, ஏனைய பள்ளி பொருள்கள் அத்தனையையும் அள்ளி வேனில் போட்டு அனுப்பிவிட்டனர். தடுக்க முயற்சித்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை காவலர்கள் பிடித்துக் கொண்டனர். பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு பள்ளிக் கட்டிடத்தை அரை மணி நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதற்குள் பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூடிவிட்டனர்.
தொடக்கத்திருந்தே என்ன காரணத்திற்காக இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வழக்குமன்ற ஆணையின்படிதான் இடிக்கிறோம் என்று சொன்ன ஆய்வாளர் வீரமணி எல்லாவற்றையும் இடித்து முடித்துவிட்ட பிறகுதான் வழக்குமன்ற ஆணையைத் தூக்கி வீசினார். இந்த ஆணையில் பள்ளி தொடர்பாக எதுவும் இல்லையே என்று கேட்டதற்கு இடிக்கச் சொல்த்தான் போட்டிருக்கு என்று சொன்னார்.
அதற்குள் பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் காவல்துறையின் அட்டூழியத்தை எதிர்த்து முழக்கமிடவும் இராமசாமியும் அவரது ஆட்களும் ஓடிவிட்டனர். சன் தொலைக்காட்சி வந்து படம் பிடிக்கத் தொடங்கியவுடன் காவல்துறையும் அங்கிருந்து புறப்பட தயாரானது. மடிப்பாக்கம் ஏ.எஸ்.பி. மகேந்திர ரத்தோர்ட் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினார். பள்ளியை இடிக்கச்சொல் ஆணையில் இல்லாதது குறித்து கேட்டதற்கு தப்பு நடந்துவிட்டது பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, ஆய்வாளர் வீரமணியை ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று திட்டினார். ஆய்வாளர் வீரமணி பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
பள்ளியைக் கட்டித்தர வேண்டும் என்று அனைவரும் கேட்கவே நாளை இந்த இடத்தில் பள்ளியை நடத்துங்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று வாய்விழி உறுதி கொடுத்துவிட்டு மகேந்திர ரத்தோர்ட் சென்றுவிட்டார்.
மறுநாள் 20#07#2005 காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். இடிந்துக் கிடந்த கட்டிடத்தைப் பார்த்து அழுதனர். இடிக்கப்பட்ட இடத்திலேயே சாமியானா பந்தல் போட்டு பள்ளி நடந்து வருகிறது. பள்ளி இடிக்கப்பட்ட செய்தி அத்தனை ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டது. ஊடகங்களில் வந்த செய்திகளில் வழக்கு மன்ற ஆணை பெறப்பட்டுத்தான் இடிக்கப்பட்டுள்ளது என்று வெளிவந்திருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
வழக்குமன்ற ஆணை என்ன சொல்கிறது?
உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 1999ஆம் ஆண்டிற்கு முன்பு இந்து வித்யாலயா என்ற ஒரு ஆங்கிலப் பள்ளியை சென்னை, நந்தம்பாக்கம் எல் அண்டு டி நிறுவனத்தில் பணி செய்யும் இரங்கநாதன் நடத்தி வந்தார்.
பள்ளி இலாபகரமாக இயங்கவில்லை என்று மூடிவிட்டார். இரங்கநாதன் வேறு யாருமல்ல இராமசாமியின் சகலைதான்.
இராமசாமி சென்னை, நந்தம்பாக்கம் அட்கோ நிறுவனத்தில் பணி செய்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இராமசாமியிடம் மூடிக்கிடந்த பள்ளியை மாதம் ரூ.1000/# (ரூபாய் ஆயிரம் மட்டும்) வாடகைக்கு எடுத்து பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை நடத்தி வருகிறோம். இராமசாமியிடம் மாதமாதம் வாடகையை நேரடியாகவோ, ஆட்கள் மூலமாகவோ வாங்கிக்கொள்வார். வாடகைக்கு இரசீது எதுவும் தரமாட்டார். ரூபாய் 10,000/# முன்பணம் கொடுத்துள்ளோம் அதற்கும் எழுதித்தரவில்லை.
இராமசாமிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இயல்பான உறவு இருந்து வந்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதவாக்கில் இராமசாமி பள்ளியை கா செய்யச்சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு இடத்தை விற்கப்போகிறோம் என்றார். அப்படியானால் நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்றோம். சரி பணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். நாங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். திடுமென ஒரு நாள் வந்து பள்ளியை கா செய்யுங்கள் என்று சொன்னார் விற்பதாக சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லை விற்கவில்லை என்று சொன்னார். ஆண்டுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிருந்தது. ஒரு ஆண்டு காலம் கொடுங்கள் அடுத்த ஆண்டு வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னோம். அவர் இசையவில்லை இந்த மாதமே கா செய்யுங்கள் என்றார்.
மறுநாள் ரெளடிகளை விட்டு மிரட்டினார். விசாரித்து பார்த்த பிறகுதான் தெரிந்தது. அந்த இடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று பள்ளிக்கு விற்றால் குறைவான விலைக்குத்தான் விற்கமுடியும் என்பதால் பள்ளியை கா செய்துவிட்டு சட்டத்திற்கு புறம்பாக வீட்டுமனையாக்கி விற்று அதிக லாபம் சம்பாதிக்கத்தான் பள்ளியை கா செய்யச் சொல்கிறார் என்று தெரிந்தது. ஆண்டு தேர்வு நெருங்கிய நேரம், வேறுவழியின்றி சென்னை உயர் வழக்கு மன்றத்தில் எங்களை சட்டத்திற்கு புறம்பாக கா செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்தோம். ரிட் மனுவில் பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்ற முயற்சிக்கமாட்டேன் என இராமசாமி உறுதி அளித்ததன்படி ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் பெற்றிருந்த இடைக்காலத்தடை ஆணையும் நீக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை ஆலந்தூர் உரிமையியல் வழக்கு மன்றத்தில் எங்களை வாடகைதாரர் என்று ஏற்கவேண்டும் என்றும் சட்டத்திற்கு புறம்பாக கா செய்யக்கூடாது என்று ஆணையிடக்கோரியும் வழக்கு தொடர்ந்தோம். (வழக்கு எண் ஓ.எஸ்.644.2004) வாடகையை வழக்கு மன்றத்தில் செலுத்துவதற்காக தனி வழக்கு தொடர்ந்தோம் (வழக்கு எண் ஓ.எஸ்.1038/2004).
இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்வழக்குமன்றத்தில் தான் இடத்தின் உரிமையாளர் இல்லை. அப்துல் ரகீம் என்பவர்தான் உரிமையாளர், தான் வெறும் “பவர் ஓல்டர்’ தான் என்று இராமசாமி தெரிவித்ததன்பேரில் அப்துல் ரகீமையும் ஒரு பார்ட்டியாக சேர்த்து வழக்கு போட்டுள்ளோம். அப்துல் ரகீம் வழக்கு மன்றத்திற்கு வராததால் “எக்ஸ் பார்ட்டி’ ஆகிவிட்டார். இராமசாமி வக்காலத்து மட்டும் போட்டுவிட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக வழக்கு மன்றத்திற்கே வராமல் இழுத்தடித்தார். அட்வகேட் கமிசன் கேட்டு நாங்கள் விண்ணப்பித்தற்கு மட்டும் “அட்வகேட் கமிசன்’ தரக்கூடாது என பதில் மனு போட்டு இருக்கிறார்.
இந்நிலையில் வழக்கு மன்றத்திற்கு வராத இராமசாமி தொடர்ந்து பள்ளியை கா செய்யச் சொல் ரெளடிகளை விட்டு தொல்லை கொடுத்தார். பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் வீரமணிக்கு பெருமளவு பணம் கொடுத்து காவல்துறை வழியாகவும் மிரட்டினார்.
எதுவாக இருந்தாலும் வழக்குமன்றத்தின் வழியாக ஆணை வரட்டும் என்ற சொல் அவர்களது மிரட்டலுக்கும் பணியாமல் பள்ளியை நடத்தி வந்தோம். அவர்களது மிரட்டலுக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள், முதல்வர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வந்தோம். எந்தவித நடவடிக்கைக்கும் இராமசாமி மசியவில்லை. மிரட்டிக்கொண்டே வந்தார். இராமசாமி மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். புகார் எண்கள். 92/2004, 161/2004, 250/2004 மற்றும் 164/2005.
எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. எங்களை மட்டுமே அழைத்து மிரட்டினார்கள். கடந்த சூன் மாத இறுதியில் தொடர்ந்து ஆய்வாளர் வீரமணியும், இராமசாமியும் அவரது ஆட்களும் மிரட்டி வந்தனர். அது குறித்து 27#06#2005 அன்று முதல்வர் அவர்களுக்கு ஆய்வாளர் வீரமணி, இராமசாமி மற்றும் அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு தந்தி அனுப்பினோம். இதற்கிடையில்தான் கடந்த 19#07#2005 அன்று இரங்கநாதன் பேரில் ஒரு ஆணையைப் பெற்று பள்ளியை இடித்துள்ளனர். பள்ளி இடிக்கப்பட்ட பிறகுதான் இரங்கநாதன் பள்ளி இடம் தோடர்பாக ஆலந்தூர் உரிமையியல் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தெரியவந்தது. 1999க்கு முன்பு
இந்து வித்யாலயா பள்ளியை நடத்தி வந்த இரங்கநாதன் தான் இப்போதும் அதே இடத்தில் இந்து வித்யாலயா பள்ளியை நடத்தி வருவதாகவும் அப்படி பள்ளி நடத்துவதை அப்துல் ரகீம் தடுப்பதாகவும் தான் பள்ளி இடத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஆணையிட வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருக்கிறார்.
தான் பள்ளி இடத்தில் அமைதியாக அனுபவிப்பதற்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என்று கோரி அப்துல் ரகீமுக்கு எதிராக “எக்ஸ் பார்ட்டி’ ஆணை பெற்றுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவ்விடத்தில் பாவாணர் தமிழ்வழிப்பள்ளி நடைபெறுவதை மூடி மறைத்துவிட்டு, வழக்குமன்றத்தில் பாவாணர் தமிழ்வழிப் பள்ளி சார்பாக நடைபெறும் வழக்குகளையும் மூடி மறைத்துவிட்டு அப்துல்ரகீமுக்கு எதிராக பெற்ற ஆணை அது.
அதுவும் ஆணையில் இரங்கநாதன் அப்துல் ரகீமால் தனக்கு தொந்தரவு நேரக்கூடாது என்றும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று மட்டும்தான் பெற்று இருக்கிறார். இரங்கநாதன் தொடர்ந்துள்ள வழக்கிலோ, அல்லது அவர் பெற்றுள்ள ஆணையிலோ பாவாணர் தமிழ்வழிப்பள்ளி ஒரு “பார்ட்டி’ இல்லை. மேலும் அவ்வாணையில் பள்ளியை இடிக்க வேண்டும் என்றும் இல்லை. அமைதியாக அவ்விடத்தை அனுபவிப்பதற்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றுதான் கோரி இருக்கிறார். காவல்துறை உதவியுடன் பள்ளியை இடிக்கச்சொல் அந்த ஆணையில் இல்லை.
வழக்கு மன்றத்தையே ஏமாற்றி உள்ள இராமசாமி, இரங்கநாதன், ஆய்வாளர் வீரமணி கூட்டுச்சதி
இராமசாமி, வழக்கு மன்றத்தில் பாவாணர் பள்ளி தொடர்ந்துள்ள வழக்கிற்கு விடை சொல்லாமல் தன்னுடைய சகலை இரங்கநாதன் மூலமாக பொய்யான ஒரு வழக்கை பதிவு செய்து, ஒரு ஆணையைப் பெற்று அவ்வாணையை வைத்துக்கொண்டு ஆய்வாளர் வீரமணிக்கு மிகப்பெரிய அளவிற்கு பணம் கொடுத்து பள்ளியை இடித்துள்ளார். இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய அளவு பணம் கைமாறி உள்ளது எனத் தெரிகிறது. மிகப்பெரிய சதித்திட்டமும் உள்ளது எனத் தெரிகிறது.
அண்மையில் உயர்வழக்கு மன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் “கட்டபஞ்நாயத்து கும்பல்கள் காவல்துறை உதவியின்றி தங்களது ரெளடித்தனத்தை செய்ய வாய்ப்பில்லை எனவும், தமிழக அரசு கட்டைப் பஞ்சாயத்து கும்பல்கள் மீதும் அதற்கு துணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்’ ஒரு வழக்கில் ஆணையிட்டுள்ள நிலையில் பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி, இராமசாமி, இரங்கநாதன் இவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் கும்பல்மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
இப்போதைய நிலை
பள்ளி இடிக்கப்பட்ட மறுநாள் 20#07#2005 அன்று பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள், பெற்றோர்கள் மீது தடியடி நடத்தி வழக்கு போடப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 28 பேர் (நால்வர் பெண்கள், 24பேர் ஆண்கள்) சென்னைக் கிளைச் சிறையிலும், மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பான தமிழ்வழிக் கல்விக் கழக ஒருங்கிணைப்பாளரும் மேடவாக்கம் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி முதல்வருமான இறைபொற்கொடியும் அடைக்கப்பட்டுள்ளார்.
கோரிக்கைகள்
1. வழக்குமன்றத்தையே ஏமாற்றி வழக்கு மன்ற ஆணையினை தவறாகப் பயன்படுத்தி பள்ளியை இடித்த இரங்கநாதன், இராமசாமி மற்றும் அவரது ஆட்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
2. வழக்கு மன்ற ஆணையைத் தவறாக பயன்படுத்துவதற்குத் துணை செய்த பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணியை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
3. பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
4. பள்ளியிருந்து களவாடப்பட்ட அத்தனை உடைமைகளையும் உடனடியாக மீட்டுத் தருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இடிக்கப்பட்ட பள்ளியை உடனடியாக கட்டித்தந்து அந்த இடத்தில் பள்ளி தொடர்ந்து நடைபெறவும், பள்ளியை நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடிக்கப்பட்ட பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தமிழ் அறிஞர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம்.
இடித்து வீழ்த்தப்பட்டது பள்ளி மட்டுமல்ல. தமிழ் உணர்வும்தான்.
நன்றி
இப்படிக்கு
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
044#22463414
காவல்துறை உதவியுடன் அட்டூழியம்
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த 1999ஆம் ஆண்டு 30 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பாவாணர் தமிழ்வழிப்பள்ளி, பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளையால் நடத்தபடுவதாகும். இப்பள்ளி தமிழ்வழிக் கல்விக் கழகத்துடனும், தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்புடனும் உறுப்பாண்மை பள்ளியாக இணைந்து செயல்பட்டு வருகிறது.
துளிர் நிலை (எல்.கே.ஜி) முதல் 5ஆம் வகுப்பு வரை நடைபெறும் இப்பள்ளியில் இப்போது மொத்தம் 144 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தாய்மொழிக் கல்வியை வயுறுத்தும் # வணிகமில்லா கல்வியை வயுறுத்தியும் இப்பள்ளியை நடத்தி வருகிறோம்.
பொதுமக்களிடம் பெறும் நன்கொடை, மாணவர்களிடம் பெறும் மிகக்குறைந்த கட்டணம் இவற்றை கொண்டுதான் பள்ளியை நடத்தி வருகிறோம்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்களே.
பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வுகள் மறக்கமுடியாத ஒன்று. பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களும் மேடைக்கூச்சம் இன்றி துணிவாக கலை நிகழ்வுகள் நடத்திக் காட்டுவது பள்ளியின் சிறப்பு.
கடந்த ஆறு ஆண்டுகளில் பள்ளி ஆண்டு விழாவிற்கு தென்மொழி ஆசிரியர் திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை தலைவர் திரு.சா.சந்திரேசன், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் வசந்த கந்தசாமி, ஞானபாரதி வலம்புரி ஜான், திரைப்பட நடிகர் சூர்யா, தமிழிசை பாணர் புஷ்பவனம் குப்புசாமி, திரைப்பட இயக்குநர் கெளதம், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆர்.டி.இராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் போருர் சண்முகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.கிறிஸ்துதாஸ் காந்தி, இராவணன் நிறுவனத் தலைவர் திரு.இரத்தினசாமி, திராவிடர் கழகத்தின் பேரா.இறையனார் ஆகிய பெருமக்கள் கலந்து கொண்டு பாராட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்க தமிழ்சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு பாடத்துணைக்கருவிகள் வழங்கி சிறப்பித்துள்ளனர். வானொ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
இந்த அளவுக்கு சிறப்பாக நடைபெற்ற பள்ளிதான் கடந்த 19#07#2005 அன்று மாலை காவல்துறை உதவியுடன் ரெளடிகளைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
வழக்கு மன்ற ஆணைக்கு எதிராக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் வீரமணி
பள்ளி இடிக்கப்பட்ட அன்று பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்தார். பள்ளியின் ஏற்பிசைவு (அங்கீகாரம்) குறித்து விசாரணை செய்தார். பள்ளியின் சார்பில் 11#02#2004 அன்று ஏற்பிசைவுக்காக அனுப்பப்பட்ட விண்ணப்பத்தைக் காட்டினோம். ஓர் ஆண்டுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இராமசாமி என்பவர் மூலம் அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வந்துள்ளதாகக் கூறினார். இடம் தொடர்பாக இராமசாமிக்கும் பள்ளியின் அறக்கட்டளைக்கும் நடக்கும் வழக்கு பற்றி விளக்கினோம். அதற்குள் இராமசாமி ஐந்து பேருடன் அங்கு வந்தார். கல்வி அலுவலர் பள்ளி வளாகத்திற்கு வெளியே சென்று அவர்களுடம் பேசினார். இராமசாமி கல்வி அலுவலரை மிரட்டியதுபோலத் தெரிந்தது. அவர்களிடம் பேசிவிட்டு பள்ளிக்குள் வந்து பார்வையாளர் பதிவேட்டில் கருத்துக்களை எழுதினார். விரைந்து ஏற்பிசைவுக்கான கருத்துருக்களை நிறைவு செய்யச் சொல் எழுதிவிட்டு பள்ளி இடம் தொடர்பான செய்தியில் நான் தலையிடமுடியாது ஏற்பிசைவு குறித்து மட்டும்தான் என்னால் தலையிட முடியும் என்று இராமசாமியிடம் சொல்விட்டு சென்று விட்டார். கல்வி அலுவலர் சென்றபிறகு அங்கிருந்து இராமசாமியும் அவரது ஆட்களும் சென்றுவிட்டனர்.
அதன்பிறகு மாலை 4 மணிக்கு பள்ளிவிட்டபிறகு பள்ளிக்கரணை தலைமைக்காவலர் (ஜ.எஸ்) இராஜ்குமார் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் பள்ளியின் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை குறித்து விசாரித்துவிட்டு சென்றார். பார்வையாளர் பதிவேட்டில் அவரும் தான் வந்து சென்றதைப் பதிவு செய்து இருக்கிறார். அவர் வந்து சென்ற கால் மணி நேரத்தில் சரியாக 4.15 மணிக்கு பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணி, 25 காவலர்கள், இராமசாமி, இரங்கநாதன், உமாபதி, சுமார் 50 ரெளடிகள் பொக்லைன் (ஜே.சி.பி) எந்திரத்துடன் வந்தனர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், ஒரு சில மாணவர்களும் மட்டும் இருந்தனர். என்ன, ஏது என்று தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் கேட்டபோது அவர்களை அடித்து வெளியே துரத்திவிட்ட காவல்துறையினரும் ரெளடிகளும் மளமளவென பள்ளியில் இருந்த மேசை, நாற்காகள், பதிவேடுகள், புத்தகங்கள், சீருடைகள், சான்றிதழ்கள், தொலைபேசி, பள்ளி செலவுக்காக அடகு வைக்க வைத்திருந்த 10 பவுன் நகை, ஏனைய பள்ளி பொருள்கள் அத்தனையையும் அள்ளி வேனில் போட்டு அனுப்பிவிட்டனர். தடுக்க முயற்சித்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை காவலர்கள் பிடித்துக் கொண்டனர். பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு பள்ளிக் கட்டிடத்தை அரை மணி நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதற்குள் பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூடிவிட்டனர்.
தொடக்கத்திருந்தே என்ன காரணத்திற்காக இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வழக்குமன்ற ஆணையின்படிதான் இடிக்கிறோம் என்று சொன்ன ஆய்வாளர் வீரமணி எல்லாவற்றையும் இடித்து முடித்துவிட்ட பிறகுதான் வழக்குமன்ற ஆணையைத் தூக்கி வீசினார். இந்த ஆணையில் பள்ளி தொடர்பாக எதுவும் இல்லையே என்று கேட்டதற்கு இடிக்கச் சொல்த்தான் போட்டிருக்கு என்று சொன்னார்.
அதற்குள் பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் காவல்துறையின் அட்டூழியத்தை எதிர்த்து முழக்கமிடவும் இராமசாமியும் அவரது ஆட்களும் ஓடிவிட்டனர். சன் தொலைக்காட்சி வந்து படம் பிடிக்கத் தொடங்கியவுடன் காவல்துறையும் அங்கிருந்து புறப்பட தயாரானது. மடிப்பாக்கம் ஏ.எஸ்.பி. மகேந்திர ரத்தோர்ட் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினார். பள்ளியை இடிக்கச்சொல் ஆணையில் இல்லாதது குறித்து கேட்டதற்கு தப்பு நடந்துவிட்டது பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, ஆய்வாளர் வீரமணியை ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று திட்டினார். ஆய்வாளர் வீரமணி பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
பள்ளியைக் கட்டித்தர வேண்டும் என்று அனைவரும் கேட்கவே நாளை இந்த இடத்தில் பள்ளியை நடத்துங்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று வாய்விழி உறுதி கொடுத்துவிட்டு மகேந்திர ரத்தோர்ட் சென்றுவிட்டார்.
மறுநாள் 20#07#2005 காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். இடிந்துக் கிடந்த கட்டிடத்தைப் பார்த்து அழுதனர். இடிக்கப்பட்ட இடத்திலேயே சாமியானா பந்தல் போட்டு பள்ளி நடந்து வருகிறது. பள்ளி இடிக்கப்பட்ட செய்தி அத்தனை ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டது. ஊடகங்களில் வந்த செய்திகளில் வழக்கு மன்ற ஆணை பெறப்பட்டுத்தான் இடிக்கப்பட்டுள்ளது என்று வெளிவந்திருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
வழக்குமன்ற ஆணை என்ன சொல்கிறது?
உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 1999ஆம் ஆண்டிற்கு முன்பு இந்து வித்யாலயா என்ற ஒரு ஆங்கிலப் பள்ளியை சென்னை, நந்தம்பாக்கம் எல் அண்டு டி நிறுவனத்தில் பணி செய்யும் இரங்கநாதன் நடத்தி வந்தார்.
பள்ளி இலாபகரமாக இயங்கவில்லை என்று மூடிவிட்டார். இரங்கநாதன் வேறு யாருமல்ல இராமசாமியின் சகலைதான்.
இராமசாமி சென்னை, நந்தம்பாக்கம் அட்கோ நிறுவனத்தில் பணி செய்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இராமசாமியிடம் மூடிக்கிடந்த பள்ளியை மாதம் ரூ.1000/# (ரூபாய் ஆயிரம் மட்டும்) வாடகைக்கு எடுத்து பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை நடத்தி வருகிறோம். இராமசாமியிடம் மாதமாதம் வாடகையை நேரடியாகவோ, ஆட்கள் மூலமாகவோ வாங்கிக்கொள்வார். வாடகைக்கு இரசீது எதுவும் தரமாட்டார். ரூபாய் 10,000/# முன்பணம் கொடுத்துள்ளோம் அதற்கும் எழுதித்தரவில்லை.
இராமசாமிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இயல்பான உறவு இருந்து வந்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதவாக்கில் இராமசாமி பள்ளியை கா செய்யச்சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு இடத்தை விற்கப்போகிறோம் என்றார். அப்படியானால் நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்றோம். சரி பணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். நாங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். திடுமென ஒரு நாள் வந்து பள்ளியை கா செய்யுங்கள் என்று சொன்னார் விற்பதாக சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லை விற்கவில்லை என்று சொன்னார். ஆண்டுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிருந்தது. ஒரு ஆண்டு காலம் கொடுங்கள் அடுத்த ஆண்டு வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னோம். அவர் இசையவில்லை இந்த மாதமே கா செய்யுங்கள் என்றார்.
மறுநாள் ரெளடிகளை விட்டு மிரட்டினார். விசாரித்து பார்த்த பிறகுதான் தெரிந்தது. அந்த இடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று பள்ளிக்கு விற்றால் குறைவான விலைக்குத்தான் விற்கமுடியும் என்பதால் பள்ளியை கா செய்துவிட்டு சட்டத்திற்கு புறம்பாக வீட்டுமனையாக்கி விற்று அதிக லாபம் சம்பாதிக்கத்தான் பள்ளியை கா செய்யச் சொல்கிறார் என்று தெரிந்தது. ஆண்டு தேர்வு நெருங்கிய நேரம், வேறுவழியின்றி சென்னை உயர் வழக்கு மன்றத்தில் எங்களை சட்டத்திற்கு புறம்பாக கா செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்தோம். ரிட் மனுவில் பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்ற முயற்சிக்கமாட்டேன் என இராமசாமி உறுதி அளித்ததன்படி ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் பெற்றிருந்த இடைக்காலத்தடை ஆணையும் நீக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை ஆலந்தூர் உரிமையியல் வழக்கு மன்றத்தில் எங்களை வாடகைதாரர் என்று ஏற்கவேண்டும் என்றும் சட்டத்திற்கு புறம்பாக கா செய்யக்கூடாது என்று ஆணையிடக்கோரியும் வழக்கு தொடர்ந்தோம். (வழக்கு எண் ஓ.எஸ்.644.2004) வாடகையை வழக்கு மன்றத்தில் செலுத்துவதற்காக தனி வழக்கு தொடர்ந்தோம் (வழக்கு எண் ஓ.எஸ்.1038/2004).
இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்வழக்குமன்றத்தில் தான் இடத்தின் உரிமையாளர் இல்லை. அப்துல் ரகீம் என்பவர்தான் உரிமையாளர், தான் வெறும் “பவர் ஓல்டர்’ தான் என்று இராமசாமி தெரிவித்ததன்பேரில் அப்துல் ரகீமையும் ஒரு பார்ட்டியாக சேர்த்து வழக்கு போட்டுள்ளோம். அப்துல் ரகீம் வழக்கு மன்றத்திற்கு வராததால் “எக்ஸ் பார்ட்டி’ ஆகிவிட்டார். இராமசாமி வக்காலத்து மட்டும் போட்டுவிட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக வழக்கு மன்றத்திற்கே வராமல் இழுத்தடித்தார். அட்வகேட் கமிசன் கேட்டு நாங்கள் விண்ணப்பித்தற்கு மட்டும் “அட்வகேட் கமிசன்’ தரக்கூடாது என பதில் மனு போட்டு இருக்கிறார்.
இந்நிலையில் வழக்கு மன்றத்திற்கு வராத இராமசாமி தொடர்ந்து பள்ளியை கா செய்யச் சொல் ரெளடிகளை விட்டு தொல்லை கொடுத்தார். பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் வீரமணிக்கு பெருமளவு பணம் கொடுத்து காவல்துறை வழியாகவும் மிரட்டினார்.
எதுவாக இருந்தாலும் வழக்குமன்றத்தின் வழியாக ஆணை வரட்டும் என்ற சொல் அவர்களது மிரட்டலுக்கும் பணியாமல் பள்ளியை நடத்தி வந்தோம். அவர்களது மிரட்டலுக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள், முதல்வர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வந்தோம். எந்தவித நடவடிக்கைக்கும் இராமசாமி மசியவில்லை. மிரட்டிக்கொண்டே வந்தார். இராமசாமி மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். புகார் எண்கள். 92/2004, 161/2004, 250/2004 மற்றும் 164/2005.
எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. எங்களை மட்டுமே அழைத்து மிரட்டினார்கள். கடந்த சூன் மாத இறுதியில் தொடர்ந்து ஆய்வாளர் வீரமணியும், இராமசாமியும் அவரது ஆட்களும் மிரட்டி வந்தனர். அது குறித்து 27#06#2005 அன்று முதல்வர் அவர்களுக்கு ஆய்வாளர் வீரமணி, இராமசாமி மற்றும் அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு தந்தி அனுப்பினோம். இதற்கிடையில்தான் கடந்த 19#07#2005 அன்று இரங்கநாதன் பேரில் ஒரு ஆணையைப் பெற்று பள்ளியை இடித்துள்ளனர். பள்ளி இடிக்கப்பட்ட பிறகுதான் இரங்கநாதன் பள்ளி இடம் தோடர்பாக ஆலந்தூர் உரிமையியல் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தெரியவந்தது. 1999க்கு முன்பு
இந்து வித்யாலயா பள்ளியை நடத்தி வந்த இரங்கநாதன் தான் இப்போதும் அதே இடத்தில் இந்து வித்யாலயா பள்ளியை நடத்தி வருவதாகவும் அப்படி பள்ளி நடத்துவதை அப்துல் ரகீம் தடுப்பதாகவும் தான் பள்ளி இடத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஆணையிட வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருக்கிறார்.
தான் பள்ளி இடத்தில் அமைதியாக அனுபவிப்பதற்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என்று கோரி அப்துல் ரகீமுக்கு எதிராக “எக்ஸ் பார்ட்டி’ ஆணை பெற்றுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவ்விடத்தில் பாவாணர் தமிழ்வழிப்பள்ளி நடைபெறுவதை மூடி மறைத்துவிட்டு, வழக்குமன்றத்தில் பாவாணர் தமிழ்வழிப் பள்ளி சார்பாக நடைபெறும் வழக்குகளையும் மூடி மறைத்துவிட்டு அப்துல்ரகீமுக்கு எதிராக பெற்ற ஆணை அது.
அதுவும் ஆணையில் இரங்கநாதன் அப்துல் ரகீமால் தனக்கு தொந்தரவு நேரக்கூடாது என்றும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று மட்டும்தான் பெற்று இருக்கிறார். இரங்கநாதன் தொடர்ந்துள்ள வழக்கிலோ, அல்லது அவர் பெற்றுள்ள ஆணையிலோ பாவாணர் தமிழ்வழிப்பள்ளி ஒரு “பார்ட்டி’ இல்லை. மேலும் அவ்வாணையில் பள்ளியை இடிக்க வேண்டும் என்றும் இல்லை. அமைதியாக அவ்விடத்தை அனுபவிப்பதற்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றுதான் கோரி இருக்கிறார். காவல்துறை உதவியுடன் பள்ளியை இடிக்கச்சொல் அந்த ஆணையில் இல்லை.
வழக்கு மன்றத்தையே ஏமாற்றி உள்ள இராமசாமி, இரங்கநாதன், ஆய்வாளர் வீரமணி கூட்டுச்சதி
இராமசாமி, வழக்கு மன்றத்தில் பாவாணர் பள்ளி தொடர்ந்துள்ள வழக்கிற்கு விடை சொல்லாமல் தன்னுடைய சகலை இரங்கநாதன் மூலமாக பொய்யான ஒரு வழக்கை பதிவு செய்து, ஒரு ஆணையைப் பெற்று அவ்வாணையை வைத்துக்கொண்டு ஆய்வாளர் வீரமணிக்கு மிகப்பெரிய அளவிற்கு பணம் கொடுத்து பள்ளியை இடித்துள்ளார். இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய அளவு பணம் கைமாறி உள்ளது எனத் தெரிகிறது. மிகப்பெரிய சதித்திட்டமும் உள்ளது எனத் தெரிகிறது.
அண்மையில் உயர்வழக்கு மன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் “கட்டபஞ்நாயத்து கும்பல்கள் காவல்துறை உதவியின்றி தங்களது ரெளடித்தனத்தை செய்ய வாய்ப்பில்லை எனவும், தமிழக அரசு கட்டைப் பஞ்சாயத்து கும்பல்கள் மீதும் அதற்கு துணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்’ ஒரு வழக்கில் ஆணையிட்டுள்ள நிலையில் பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி, இராமசாமி, இரங்கநாதன் இவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் கும்பல்மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
இப்போதைய நிலை
பள்ளி இடிக்கப்பட்ட மறுநாள் 20#07#2005 அன்று பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள், பெற்றோர்கள் மீது தடியடி நடத்தி வழக்கு போடப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 28 பேர் (நால்வர் பெண்கள், 24பேர் ஆண்கள்) சென்னைக் கிளைச் சிறையிலும், மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பான தமிழ்வழிக் கல்விக் கழக ஒருங்கிணைப்பாளரும் மேடவாக்கம் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி முதல்வருமான இறைபொற்கொடியும் அடைக்கப்பட்டுள்ளார்.
கோரிக்கைகள்
1. வழக்குமன்றத்தையே ஏமாற்றி வழக்கு மன்ற ஆணையினை தவறாகப் பயன்படுத்தி பள்ளியை இடித்த இரங்கநாதன், இராமசாமி மற்றும் அவரது ஆட்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
2. வழக்கு மன்ற ஆணையைத் தவறாக பயன்படுத்துவதற்குத் துணை செய்த பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணியை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
3. பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
4. பள்ளியிருந்து களவாடப்பட்ட அத்தனை உடைமைகளையும் உடனடியாக மீட்டுத் தருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இடிக்கப்பட்ட பள்ளியை உடனடியாக கட்டித்தந்து அந்த இடத்தில் பள்ளி தொடர்ந்து நடைபெறவும், பள்ளியை நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடிக்கப்பட்ட பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தமிழ் அறிஞர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம்.
இடித்து வீழ்த்தப்பட்டது பள்ளி மட்டுமல்ல. தமிழ் உணர்வும்தான்.
நன்றி
இப்படிக்கு
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
044#22463414

